உடுமலையில் கிளை நூலகம் எண் 2 சார்பில் 6 வது வாரமாக தொடர்ந்து கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது

 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் கடந்த 6 வது வாரமாக உடுமலை ருத்ரப்பா நகர் பகுதியில் பொது மக்களுக்கு கபாசுர குடிநீர் வழங்கினார். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி கடை பிடிக்க வலியுறுத்தி அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சிக்கு நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் சுப்பிரமணி ஸ்டாலின். வாசகர் வட்ட உறுப்பினர்கள்  ஆனந்தன், பாலகிருஷ்ணன், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர். சைக்கிள் மூலம் வீடு வீடாக சென்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image