பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த 3 மது பிரியர்கள் கைது
வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

 

திருப்பூரில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அப்போது கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்.நகரில் ஒரு டாஸ்மாக் கடையை திறந்ததும், அங்கு வந்த மதுபிரியர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பாக பிச்சம்பாளையம் புதுரை சேர்ந்த செல்லவேல் வயது 55, முருகானந்தபுரத்தை சேர்ந்த சரவணன் வயது 40, கணக்கம்பாளையம் பிரிவை சேர்ந்த அருண் வயது 29 ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடக்கு போலீசார் கைது செய்தனர்.

 

இதேபோல் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பும் சிலர் பட்டாசு வெடித்தனர். அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது பிறந்தநாளுக்காக பட்டாசு வெடித்தோம் என்று கூறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image