திருப்பூர்; உலக தலசீமியா தின ரத்ததான முகாம். சு.குணசேகரன் எம்.எல்.ஏ., துவக்கம்!!
திருப்பூரில் உலக தலசீமியா தின ரத்ததான முகாம் சு.குணசேகரன்  எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

தலசீமியா நோயினால் பாதிப்பு அதிகமானவர்களுக்கு, ரத்த அணுக்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. இதில் இரண்டாம் நிலை பாதிப்பு ஏற்ப்பட்ட்டவர்கள் தேவைப்படும் போதும், மூன்றாம் நிலை பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் மாதம் ஒருமுறையும் ரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டியது இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 142 பேர் இருக்கிறார்கள். 

எனவே தலசீமியா பாதிப்பு உள்ளவர்களுக்கென அடிக்கடி ரத்ததான முகாம்கள் நடக்கிறது. 


இந்நிலையில், வெள்ளிக்கிழமை உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சஷ்சம் அமைப்பு, சேவாபாரதி மற்றும் முயற்சி அமைப்பு இணைந்து நடத்திய ரத்ததான முகாம் திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை  தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். இதில் சேவாபாரதி ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், சஷ்சம் அமைப்பு நிர்வாக்கிகள் ரத்தினசாமி, தமிழ்செல்வன், முயற்சி அமைப்பு நிர்வாகிகள் சிதம்பரம், பரமசிவம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார்  மற்றும் ஆண்டவர் பழனிசாமி, தம்பி சண்முக சுந்தரம். உள்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் 50க்கும் மேற்ப்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். 

 







திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 கிலோ அரிசி, மளிகைப்பொருட்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன்ன் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், சக்சம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, கோவிந்தராஜ், கோவிட்-19 தடுப்பு ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 







Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image