ஒட்டு மொத்த திபெத்தியர்களின் புனிதத்தையும் காத்துவரும் இந்தியாவுக்கு நன்றி -அமெரிக்க வெளியுறவுத் துறை டுவிட்

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திபெத்தைச் சேர்ந்த புத்த மதத்தினரின் தலைவர் தலாய் லாமா எனப்படுகிறார். திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை எதிர்த்து கடந்த 1959-ல் அங்கு புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சியை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதனால் தற்போதைய தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் அப்போது முதல் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தங்கியுள்ளார்.


இந்த நிலையில் தலாய்லாமா நேற்று முன்தினம் தனது 85 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா, 1959-ம் ஆண்டு முதல் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து வருவற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறையின் இயக்குனரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "தனது அமைதி மற்றும் கருணையின் மூலம் உலகை ஊக்கப்படுத்திய தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 1959-ம் ஆண்டு முதல் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தந்து அவரையும் ஒட்டுமொத்த திபெத்தியர்களின் புனிதத்தையும் காத்துவரும் இந்தியாவுக்கு நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு